ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு யாழில் ஆரம்பம்
Jaffna
Sri Lankan political crisis
Current Political Scenario
By Independent Writer
Courtesy: லின்ரன்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) முதலாவது பேராளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.
சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் இன்றைய தினம் காலை (22) 10 மணியளவில் இந்த மாநாடு ஆரம்பமானது.
இம்மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் பாட்டு பாடப்பட்டது.
கட்சியின் எதிர்கால செயற்பாடுகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பேராளர் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள், கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி