துபாய்க்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
துபாய் சுற்றுலாத் துறையை மீண்டும் புத்துயிர்பெறச் செய்ய அந்நாட்டு அரசு புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரினால் துபாய்க்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதனாலே இவ்வாறான நடவடிக்கையை துபாய் அரசாங்கம் எடுத்துள்ளது.
துபாய் பொருளாதாரம்
இதனடிப்படையில் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் துபாய் இன்வைட் (Dubai Invite) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி துபாயில் வசிக்கும் மக்கள் தங்களது வெளிநாட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் துபாய்க்கு அழைத்து வந்தால் அவர்களுக்குச் சுமார் 3,000 ஏ.இ.டி (சுமார் 610 பவுண்ட்ஸ் / 780 டொலர்) மதிப்பிலான சிறப்புச் சலுகைகள் மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகைப் பொதியில் விடுதித் தங்குமிடங்கள் (Hotels), உணவகக் தள்ளுபடிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் சீட்டுகள் போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா-இஸ்ரேல் மோதலின் போது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், துபாயின் சர்வதேச விமான நிலையத்தையும் புகழ்பெற்ற ஃபேர்மாண்ட் (Fairmont) விடுதியையும் தாக்கியதைத் தொடர்ந்து துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவாக சுமார் 2 கோடி (20 மில்லியன்) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த துபாயில் தற்போது ஹோட்டல்களில் அறைகள் காலியாகக் கிடப்பதுடன் பல வணிக நிறுவனங்களின் வருவாய் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அக்டோபர் 31 இற்குள் துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு குடியிருப்பாளர் அதிகபட்சமாக மூன்று சலுகைப் பொதிகளைப் பெற முடியும்.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் 10,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 16 மணி நேரம் முன்