உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பாப்பரசர் வெளியிட்ட அறிவிப்பு
easter attack
Pope Francis
Cardinal Melkum Ranjith
By Sumithiran
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளுக்கும் தனது முழு ஆதரவை வழங்குவதாக பாப்பரசர் பிரான்சிஸ்(Pope Francis) தெரிவித்தார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் (Cardinal Melkum Ranjith)ஆண்டகைக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் அது தொடர்பாக தாம் பிரார்த்திப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தை செய்யுமாறும், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.