கோட்டாவுக்கு ஆபத்தாகும் புகைப்படம்...! நடு நடுங்கும் ராஜபக்சாக்கள்
செனல் 4 ஆவணப்படம் வெளியானபோது அதை வெறும் அரசியல் சதி எனக் கோட்டாபய தரப்பு ஒட்டுமொத்தமாக மறுத்தது ஆனால் தற்போது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோட்டாபய – அசாத் மௌலானா புகைப்படம் அவர்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்ற வாதத்தை உடைத்துக் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆரம்பக்கட்ட அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரிக் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இந்த ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது அவருக்குச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு பெரும் முட்டுக்கட்டையாகியுள்ளது.
இலங்கை அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மாபெரும் அரசியல் சூத்திரதாரிகள் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்தது.
இந்தநிலையில் குறித்த புகைப்பட விவகாரம் அச்சந்தேகத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.
அதிகாரத்தில் இருந்தபோது எட்டாக்கனியாக இருந்த உண்மைகள், இப்போது 2026 நீதிமன்ற விசாரணைகளில் புகைப்படங்களாக வெளிவருவது இலங்கை அரசியல் வரலாற்றில் ஈஸ்டர் தாக்குதல் நீதிக்கான வழக்கில் ஒரு திருப்புமுனையாக அமையலாம் என்ற ரீதியில் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 21 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்