ஈஸ்டர் ஞாயிறு: தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க பணிப்புரை
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (10) வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பு மத சேவைகள் நடைபெறும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்துறை பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
காவல்துறைக்கு பணிப்புரை
இந்த காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் காவல்துறைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) மற்றும் முப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
