உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு! பிள்ளையானின் வாக்குமூலம்

CID - Sri Lanka Police Pillayan Easter Attack Sri Lanka
By Harrish Jan 10, 2025 12:12 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy) நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றில் இன்று(10.01.2025) முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“உலகத்திலே உச்ச பாதுகாப்பு கட்டமைப்புக்கு அதிக நிதியை செலவு செய்கின்ற அமெரிக்காவிலே ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு : வெளியான அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு : வெளியான அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்

அதே போன்றுதான் எங்களுடைய நாட்டிலேயும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.

அந்த தாக்குதலை காத்தான்குடியை சேர்ந்த இளைஞர்கள் திட்டமிட்டு நடத்தி இருந்தார்கள். அவர்கள் ஐ.எஸ் ஆதரவாளர்கள், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை அவர்கள் பிரதிநிதி துறப்படுத்துகின்றார்கள் அதனை அவர்களே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு! பிள்ளையானின் வாக்குமூலம் | Easter Sunday Attack Pillayan Speech

அந்த சஹாரான் ஹாசிம் என்பவர்தான் அந்த மதத்திற்காக மரணிப்பதாகவும், அல்லாஹ்வின் கொள்கையை பின்பற்றி மரணிப்பதன் காரணமாக சொர்க்கத்துக்கு செல்வதாகவும், ஹாபீர்களின் காசோ, பணமோ, ஒத்துழைப்புக்கள் இல்லை என்றும் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள்.

இதனை அறியாமல் இப்போது வந்திருக்கின்ற அரசாங்கம் குறிப்பாக புதிய ஜனாதிபதி அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகள் அல்லது கிறித்துவ மக்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு இதை என்னோடு இருந்து பிரிந்து சென்ற அசாத் மௌலானா வெளிநாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்காக வழங்கிய வாக்கு மூலத்தை இணைத்து புதியதொரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தார்கள். 

இது நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. 

அந்த நேரத்திலிருந்து ஜனாதிபதி அவர்கள் ஒரு இஸ்லாமிய குடிமகனாக இருந்த ஓய்வு பெற்ற இமாம் எனும் நீதி அரசரை அந்த விசாரணை குழுவின் தலைவராக நியமித்திருந்தார்.

ராஜபக்சர்களின் சகாவிற்கு விளக்கமறியல்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ராஜபக்சர்களின் சகாவிற்கு விளக்கமறியல்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

புதிய அரசாங்கம் 

அந்த குழுவினுடை பரிந்துரையிலேயே மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்த இவ்விடயம், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கோ ஏனையவருக்கோ சம்பந்தம் இல்லாத விடயம் என தெளிவாக கோடிட்டு காட்டிருந்தது.

இருந்த போதிலும் புதிய அரசாங்கம் அதனை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் விசாரணைக்கு கொடுத்திருந்தது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு! பிள்ளையானின் வாக்குமூலம் | Easter Sunday Attack Pillayan Speech

நான் அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தேன் வாக்குமூலம் வழங்கியிருக்கிறேன், அந்த வாக்குமூலத்தை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது. 

இந்த நிலையில், நான் நாட்டிலிருந்து தப்பிச்செல்வேன் என்ற அடிப்படையில் எனது கடவுச்சீட்டைகூட தடை செய்து வைத்திருக்கின்றார்கள்.

எனவே மக்களுக்கு நான் தெளிவாக கூறுகின்றேன் நான் இதிலே நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தபடாதவன். 

நான் ஒரு ஆயுதப் போராட்டத்தில் இருந்தேன், என்பதற்காக என் மீது கறைசாற்றுவதற்காக என்னுடைய பெயரை, அசிங்கப்படுத்துவதற்காக எங்களுடைய அரசியலை இல்லாமல் செய்வதற்காக, அரசாங்கமும் இன்னும் சிலரும் செயற்பட்டார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.


you may like this,


பயிற்சி ஆசிரியர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

பயிற்சி ஆசிரியர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026