உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியை அம்பலப்படுத்தப்போகும் முக்கிய நபர்

Sri Lanka Easter Attack Sri Lanka
By Sumithiran Apr 20, 2025 09:52 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அசாத் மௌலானா(Asad Maulana) சதியை வெளிப்படுத்த முடியும் என்று கத்தோலிக்க திருச்சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர், கத்தோலிக்க திருச்சபை நடந்து வரும் விசாரணைகளின் நிலை குறித்து திருப்தி தெரிவித்துள்ளது.

நேற்று (19) கொழும்பு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த கொழும்பு மறைமாவட்ட தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்தா(Director Rev. Father Jude Krishantha), தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் அவ்வப்போது திருச்சபைக்கு தகவல்களைத் தெரிவித்து வருவதாகக் கூறினார்.

விசாரணைகளில் திருப்தி அடைகிறோம்

"விசாரணைகளில் நாங்கள் திருப்தி அடைகிறோம். விசாரணைகள் எவ்வாறு முன்னேறி வருகின்றன என்பது குறித்து அவர்கள் அவ்வப்போது எங்களுக்குத் தெரிவித்தனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியை அம்பலப்படுத்தப்போகும் முக்கிய நபர் | Easter Sunday Attacks Maulana Could Uncover Plot

 இழப்பீடு கோரி மனு செய்த பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் உட்பட பல வழக்குகள் இன்னும் நடந்து வருவதாகவும், தற்போது சுமார் 20-25 சந்தேக நபர்கள் காவலில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

"காவலில் உள்ளவர்களில் சிலர் தாக்குதல் குறித்து நிறைய தகவல்களைக் கொண்ட நபர்கள்."

அசாத் மௌலானா ஒரு முக்கிய நபராக இருக்க முடியும்

தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதில் அசாத் மௌலானா ஒரு முக்கிய நபராக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியை அம்பலப்படுத்தப்போகும் முக்கிய நபர் | Easter Sunday Attacks Maulana Could Uncover Plot

சனல் 4 ஆவணப்படத்திற்காக தாக்குதல் குறித்து சாட்சியமளித்த சாட்சியான மௌலானா, புலனாய்வு சேவைக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகவும், இந்த அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

“சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வழங்கிய அசாத் மௌலானாவை விசாரிப்பதன் மூலம் நிறைய விஷயங்களை வெளிப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அருட்தந்தை கிருஷாந்தா கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளின் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, ​​வழக்குகளை காவல்துறையினர் கையாண்டு வருவதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க குறித்த ஊடகத்திடம் தெரிவித்தார்.

“நாங்கள் இதில் ஈடுபடவில்லை. நீங்கள் காவல்துறையினரிடம் பேச வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பிள்ளையான் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள்! யாரைக் கொல்லப் பயன்பட்டன?

பிள்ளையான் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள்! யாரைக் கொல்லப் பயன்பட்டன?

காவல்துறை ஊடகப் பேச்சாளர்

இது தொடர்பாக பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க, தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் விளக்கமறியல் சிறையில் அல்லது நிபந்தனை பிணையில் வெளியே உள்ளனர் என்று தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியை அம்பலப்படுத்தப்போகும் முக்கிய நபர் | Easter Sunday Attacks Maulana Could Uncover Plot

தற்போது எந்த சந்தேக நபரும் காவல்துறை காவலில் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், விசாரணைகள் முன்னேறி வருவதாகக் கூறினார். “விசாரணைகள் நன்றாக நடந்து வருகின்றன. அவை முன்னேற்றம் அடைந்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ள பெரும் அங்கீகாரம்!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ள பெரும் அங்கீகாரம்!

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கத்தோலிக்க சமூகம், இலங்கையர்களுடன் சேர்ந்து, காத்திருப்பதாக அருட்தந்தை கிருஷாந்த மேலும் கூறினார். தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தல்களை வெளியிட்டு விசாரணைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வார் என்று அவர்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியை அம்பலப்படுத்தப்போகும் முக்கிய நபர் | Easter Sunday Attacks Maulana Could Uncover Plot

 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும், கட்டுவாபிட்டி புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் நாளை (21) தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல்

கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

you may like this

 

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020