மயிலத்தமடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

Batticaloa Eastern University of Sri Lanka Eastern Province
By Eunice Ruth Nov 02, 2023 02:25 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

மயிலத்தமடு-மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பினை நிறுத்தாவிட்டால், வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று திரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பினை கண்டித்தும் கால்நடை பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மயிலத்தமடு மாதவனைப் பகுதிகளில் காணப்படும் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்களுக்கான கால்நடை மேச்சல் தரைக் காணிகள் அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சிங்கள விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மயிலத்தமடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் | Eastern University Join Mayilathamadu Read More

வாழ்வாதாரம் பாதிப்பு

இதன் காரணமாக மட்டக்களப்பை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் | Eastern University Join Mayilathamadu Read More

இந்த விடயம் தொடர்பாக அரசில் அங்கம் வகிக்கின்ற மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மௌனமாக இருப்பதாகவும், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் இது தொடர்பான முடிவு எட்டப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையை இறுகப்பற்ற பிக்குகளுக்கு சாமரம் வீசும் இந்தியா!

இலங்கையை இறுகப்பற்ற பிக்குகளுக்கு சாமரம் வீசும் இந்தியா!

தொடர் போராட்டம்

இந்த நிலையில், தமக்கான நீதி வழங்கக் கோரி கடந்த 49 நாட்களாக மட்டக்களப்பு கால்நடைப் பண்ணையாளர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலத்தமடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் | Eastern University Join Mayilathamadu Read More

அத்துடன், அவர்கள் ஊர்வலமாக சென்று சித்தாண்டியில் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021