ஈழத்தமிழர்களுக்காக யாழில் நடைபெறவுள்ள மாபெரும் பூப்பந்தாட்ட போட்டி!
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜீலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலக தமிழ் பூப்பந்தாட்ட பேரவையின் நிறுவுனரான புலம்பெயர் தமிழர் கந்தையா சிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் வருடாந்தம் ஒவ்வொரு நாடுகளில் தான் இந்த போட்டிகளை முன்னெடுப்பதாக ஐ.பி.சி தமிழுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இதில் பங்கேற்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள போட்டியாளர்கள் தாயகத்துக்கு வரவுள்ளதாக கந்தையா சிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமது அமைப்பு ஏற்பாடு செய்யும் இந்த போட்டியில் எந்தவொரு அரசியல் ஆதிக்கமும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
இந்த போட்டிகள் தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |