அனைத்து கட்சிகளுக்கும் ஆணைக்குழு அழைப்பு - தொடரும் வேட்புமனு நிராகரிப்பு..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை குறித்த பிரதிநிதிகளை சந்திப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் சந்திப்பது இதுவே முதல் முறை.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளது.
பதுளை
மேலும், பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி சுமார் 15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல உள்ளூராட்சி சபை மற்றும் மஹியங்கனை உள்ளூராட்சி சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஹாலிஎல பிரதேச சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வழங்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை அறிந்த அதன் வேட்பாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னாவ உள்ளூராட்சி சபைக்கு வானூர்தி சின்னத்துடன் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டதுடன் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் உள்ளூராட்சி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
திருகோணமலை
இதேவேளை, கந்தளாய் உள்ளூராட்சி சபைக்கு திரு.றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டம் சேருவில உள்ளூராட்சி சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 10 அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேச்சைக் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் கலவான உள்ளூராட்சி சபைகளுக்கு முன்னிலை சோசலிச கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 06 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

