வடக்கில் அதிகூடிய தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய காவல்துறையினர்
வவுனியாவில் (vavuniya) 9000 தேர்தல் சுவரொட்டிகள் காவல்துறையினரால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் (srilanka) ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்றாகும்.
இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.
9000 மேற்பட்ட பதாதைகள்
அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட காவல் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |