இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் - அநுர அரசின் அதிரடி அறிவிப்பு
இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உறுதிப்படுத்தாவிடின் அந்த நகைகளின் ஒரு தொகை வடக்கு பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
எனினும், தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும் என சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் ஊடாக காவல்துறை திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்
இந்த தங்க நகைகள் யுத்த காலத்தின் போது வடக்கு மாகாணத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தங்க நகைகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இந்நிலையில், அறிக்கை கிடைத்ததன் பின்னர், அவற்றை உரியவர்களுக்கு ஒப்படைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
வடக்கு அபிவிருத்திக்கு இந்த தங்க நகைகளின் ஒரு தொகையையும், அரசாங்கத்தால் ஒரு தொகையும் வைப்பிலிடப்படும்.
இதற்கு பொது நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த அபிவிருத்தி திட்டத்தில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்பளிக்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் : அரசுக்கு செல்வம் எம்.பி. அழுத்தம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
