விடுதலை புலிகளின் ஆயுதங்கள்: அர்ச்சுனாவின் அறிக்கைக்கு அரசாங்கம் பதில்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் நேற்று(05) தெரிவித்த குறித்த கருத்தை முற்றிலும் நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா இந்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் : அரசுக்கு செல்வம் எம்.பி. அழுத்தம்
புலிகளின் ஆயுதங்கள்
அந்த கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் ஜனாதிபதி அநுரவினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் அதன்போது தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, அர்ச்சுனாவின் குறித்த அறிக்கைக்கு ஆளும் தரப்பினரால் பாரிய எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதோடு, இதன் விளைவாக சபையில் ஒரு சூடான சூழ்நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அர்ச்சுனாவின் அறிக்கையானது, ஆதாரமற்றது மற்றும் தவறானது என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகோந்தா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
