இலங்கையைத் தாக்கபோகும் உலகம் அஞ்சும் எல் நினோ மாற்றம்!
அடுத்த மாதம் முதல் எல் நினோ நிகழ்வால் நாட்டின் வானிலை பாதிக்கப்படும் என இலங்கை வானிலை ஆராச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த நிகழ்வு தென்மேற்குப் பருவமழை வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலை ஏற்கனவே உருவாகிவிட்டதாகவும், அதன் தாக்கம் சுமார் 11 மாதங்களுக்கு மாறுபட்ட அளவுகளில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இருப்பினும், நாட்டின் வானிலை நிலவரங்களில் எல் நினோவின் சாத்தியமான தாக்கங்களைக் கையாள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று (10) நடைபெற உள்ளது.

வானிலை ஆய்வுத் துறையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில், நீர்ப்பாசனம், மகாவலி ஆணையம், பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, வேளாண் மேம்பாடு மற்றும் நீர்வழங்கல் உள்ளிட்ட 20 முன்னணித் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்