நள்ளிரவு முதல் நீக்கப்பட்டது அவசரகால சட்டம் - வர்த்தமானியும் வெளியானது
srilanka
gotabaya
emergency law
By Jaso
தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து ஆர்ப்பாட்டம் நடந்து வரும் நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச.
அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் அவர் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்கு எதிராக பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் அந்த சட்டத்தை இன்று நள்ளிரவு முதல் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத் அவர்களின் கையொப்பத்துடன் வெளியாகி உள்ளது.
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 10 மணி நேரம் முன்