மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உடல்நிலையும் மனநிலையும் சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு முடிவு சாதகமாகும்.
[3HJE22 ]
சிலருக்கு சொத்து சேரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடந்தேறும். பொருளாதாரம் உயரும்.
அரசுவழி முயற்சி சாதகமாகும். குரு பார்வை, ராகுவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.
கடக ராசி
குரு பார்வைகள் 4, 6, 8 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். தாய்வழி உறவின் ஆதரவு உண்டு. உடல்நிலை சீராகும். வழக்குகள் முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.
தடைபட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய வருவாய் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
உடல்நிலை பாதிப்பு விலகும்.
துலாம் ராசி
குரு பார்வையுடன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நீண்ட நாள் கனவு நனவாகும். பொன், பொருள், வீடு, மனை வாங்குவீர்கள்.
பாக்ய குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் செல்வாக்கை உயர்த்தும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். சனி, ஞாயிறில் நிதானமாக செயல்படுவது நல்லது.
இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஞாயிறன்று புதிய முயற்சி வேண்டாம்.
சிம்ம ராசி
ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது மனக்குழப்பம், போராட்டத்தை உண்டாக்கினாலும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் வரவை அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அனைத்தையும் சமாளித்திடும் சக்தியை வழங்குவார்.
கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் வெற்றியாகும்.
குரு பார்வைகளால் தடைபட்ட வேலை முடிவிற்கு வரும். செயலில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
விருச்சிக ராசி
குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். புதிய சொத்து வாகனம் சேரும். திங்கள் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
வருமானம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். திங்கள், செவ்வாயில் அனைத்திலும் கவனம் தேவை.
புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். செவ்வாய், புதனில் கவனமாக செயல்படவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
