மீண்டும் வழமைக்கு திரும்பிய ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF)
புதிய இணைப்பு
ஊழியர் சேமலாப நிதிய சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் திணைக்களங்களில் ஊழியர் சேமலாப நிதி சலுகை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணி முதல் வழமை போல் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணினி தரவுத்தள அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF) இன்று முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தொழிலாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
அதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு நன்மைகள், இறந்த உறுப்பினர்களின் நன்மைகள், 30% நன்மைகளை செலுத்தல்.
மற்றும், புதிய நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் பி கார்டுகளை திருத்துதல் ஆகியவை நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அலுவலகங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
மேலும், குறித்த சேவைகளைப் பெற 011 2201201 என்ற எண்ணை அழைத்து திகதியை முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
