சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : வெளிப்படையாக அறிவித்தார் அமைச்சர் அலி சப்ரி

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Ali Sabry Shanakiyan Rasamanickam
By Sumithiran Mar 08, 2024 05:44 AM GMT
Report

சமஷ்டி தீர்வை கோருவதற்கான உரிமை தமிழ் தரப்பினருக்கு உள்ளது. அதனை நாம் மறுக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

அதிகார பகிர்வு இல்லாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை

இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் நாட்டை சரியான திசையில் எவராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை காணவும் முடியாது.அதேபோன்று, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு நாட்டில் மிக அவசியமாகும் .

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : வெளிப்படையாக அறிவித்தார் அமைச்சர் அலி சப்ரி | Ethnic Problem Of The Sri Lankan Tamils

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் 56 கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கனடாவில் இலங்கையர் படுகொலை:பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி

கனடாவில் இலங்கையர் படுகொலை:பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி

காணாமற்போனோருக்கு முழுமையான தீர்வை வழங்க முடியாது

காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு அண்மைக்காலமாக 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான தீர்வை வழங்க முடியாவிட்டாலும் இதற்கு தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். இதில் உறுதியாக உள்ளோம்.

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : வெளிப்படையாக அறிவித்தார் அமைச்சர் அலி சப்ரி | Ethnic Problem Of The Sri Lankan Tamils

மேற்படி அலுவலகத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியில் நீண்ட காலமாக இரண்டாக பிளவுபட்டு செயல்பட்டுள்ளோம். இனபிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியம்.

மீண்டும் வலுவடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரம் : பீட்டர் ப்ரூவர் பாராட்டு

மீண்டும் வலுவடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரம் : பீட்டர் ப்ரூவர் பாராட்டு

புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் தொடர்பில்

புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் தொடர்பில் எமக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. எனினும் அவர்களில் ஒரு தரப்பினர் தனியான அரசு தொடர்பிலேயே பேசுகின்றனர். தேசிய பிரச்சினைக்கான தீர்வு பற்றி தெரிவிக்கும் போது சமஷ்டி தீர்வை கோருவதற்கான உரிமை தமிழ் தரப்பினருக்கு உள்ளது. அதனை நாம் மறுக்க முடியாது. இது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது.

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : வெளிப்படையாக அறிவித்தார் அமைச்சர் அலி சப்ரி | Ethnic Problem Of The Sri Lankan Tamils

நாம் அதனை வழங்குகின்றோமோ இல்லையோ அதனை கோருவது அவர்களது உரிமை. இதனை வழங்குவதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பரென்றும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025