கனடாவில் இலங்கையர் படுகொலை:பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி
Attempted Murder
Sri Lanka
Canada
By Jaso
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளைகள் உட்பட அறுவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சி அளிக்கும் பயங்கரமான வன்முறை சம்பவம் என்றார்.
உண்மையான பின்னணி வெளிக்கொண்டு வரப்படும்
காவல்
துறை தரப்பு உரிய விசாரணை முன்னெடுப்பதுடன், உண்மையான பின்னணியை வெளிக்கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இந்த படுகொலை சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என அந்நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்