அடக்குமுறையை நிறுத்துங்கள்: ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!
ஈரானில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா நேற்று (22-01-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் தற்போது மிகவும் வன்முறை நிறைந்த சூழல் நிலவி வருகிறது.
அடக்குமுறை
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரான் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
ஈரானிய மக்களின் அபிலாஷைகளை ஆதரிப்பதற்காகத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை மற்றும் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
மரண தண்டனைகளை நிறுத்துங்கள், எதிர்ப்பை மௌனமாக்கப் பயன்படுத்தப்படும் அரசு அனுமதித்த கொலைகளை உடனடியாக நிறுத்துங்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆர்ப்பாட்டக்காரரையும் அரசியல் கைதியையும் விடுவிக்க வேண்டும்.
ஈரான் மக்கள் தனியாக இல்லை, ஐரோப்பிய நாடாளுமன்றம் உங்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |