ஐரோப்பாவில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஜெட் எரிபொருள் விலை
ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், இன்னும் மூன்றே வாரங்களில் ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என ஐரோப்பிய கண்டத்தின் விமான நிலையங்களுக்கான வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.
பாரசீக வளைகுடா விமான எரிபொருளின் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இது ஐரோப்பாவின் இறக்குமதியில் சுமார் 50% பங்கைக் கொண்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பாவில் கோடை சுற்றுலாப் பருவம் நெருங்கி வருவதால், ஜெட் எரிபொருள் கிடைப்பது குறித்து தங்கள் உறுப்பினர்களுக்கு கவலைகள் அதிகரித்து வருகின்றன என ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) ஐரோப்பா தெரிவித்துள்ளது.
விநியோகப் பற்றாக்குறை
இதன்படி விநியோகப் பற்றாக்குறையானது விமான நிலையச் செயல்பாடுகளையும் விமானப் போக்குவரத்து இணைப்பையும் கடுமையாகச் சீர்குலைக்கும்.

இதனால், பாதிக்கப்படும் சமூகங்களுக்கும் ஐரோப்பாவிற்கும் கடுமையான பொருளாதாரத் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ACI ஐரோப்பாவின் தலைமை இயக்குநர் ஆலிவர் ஜான்கோவெக், எரிசக்தி மற்றும் சுற்றுலாவுக்கான ஐரோப்பிய ஆணையர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டத்தில், அடுத்த மூன்று வாரங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முறையில் மீண்டும் தொடங்கப்படாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முறையான ஜெட் எரிபொருள் பற்றாக்குறை ஒரு யதார்த்தமாகிவிடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை குறித்த கவலைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே விமான சேவைகளைக் குறைத்து, பயணிகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியுள்ளன.
கடந்த வாரம், ஐரோப்பிய ஜெட் எரிபொருளின் முக்கிய விலையானது, போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு தொன்னுக்கு 831 டொலராக இருந்த நிலையில், தற்போது 1,838 டொலர் (1,387 பவுண்ட்) என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தை சக்திகள்
இதன்படி சந்தை சக்திகளையும் தழுவலையும் மட்டும் நம்பியிருப்பது ஒரு தீர்வு அல்ல என்று எழுதிய ஜான்கோவெக், ஐரோப்பிய ஒன்றியம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஜெட் எரிபொருள் உற்பத்தி மற்றும் அதன் இருப்பு குறித்த மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு இல்லாததை அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், ஜெட் எரிபொருள் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு சார்பாக அரவால் அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |