முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்துத் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே காவல்துறையினர் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், சி.டி. விக்ரமரத்னவின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
மாலபே, தலாஹேன பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (18-07-2026) காலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாகச் சி.டி. விக்ரமரத்ன தனது இல்லத்தில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் குறித்த இடத்திற்குச் சென்ற கடுவலை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
தற்போதைய காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்ற அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இதன்போது கடுவலை நீதவான், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு முன்பே சிஐடிக்குக் கிடைத்த 129 பயங்கரவாதிகளின் பட்டியல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |