போலி அட்டோனி பத்திர வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர்
போலி அட்டோனி பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி அட்டோனி பத்திரம் தயாரித்து விற்று 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக உதய கம்மன்பில உள்ளிட்ட இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னோடி நீதிபதி நாமல் பண்டார பலல்லே இந்தத் தீர்ப்பை இன்று (24) வழங்கினார்.
போலி அட்டோனி பத்திரம்
பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முறைப்பாட்டு தரப்பு தவறிவிட்டதால், பிரதிவாதிகள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி கூறினார்.
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் சாதிக்கிற்குச் சொந்தமான டிஜிட்டல் நொமினீஸ் தனியார் நிறுவனத்தின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தனியார் வங்கிக்கு சொந்தான 21 மில்லியன் ரூபா பங்குகளை போலி அட்டோனி பத்திரத்தை தயாரித்து விற்பனை செய்திருந்தனர்.
இதன் ஊடாக 21 மில்லியன் ரூபா முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
