திருட்டுக்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவவீரரிடம் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள்
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
மாளிகாவத்தை மல்வத்தை பாலத்திற்கு அருகில் பல திருட்டுகளில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலும் விசாரணையை மேற்கொண்டபோது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் மற்றும் ஒரு மகசின் கண்டுபிடிக்கப்பட்டதாக மாளிகாவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
அதன்படி, 42 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் ரி 56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மகசின், அதே போல் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை மாளிகாவத்தை காவல்துறையினரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
