எரிவாயு வெடித்தே மகள் உயிரிழப்பு - தந்தை வெளியிட்ட மேலதிக தகவல்கள்
அண்மையில் புதிதாக வாங்கப்பட்ட எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே தனது மகள் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் உயிரிழந்த யுவதியின் தந்தை தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர் திம்புலாகலை 481 இல் வசிக்கும் 51 வயதான பி.ஜி. ஜயசூரிய என்பவராவார்.இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிரிழந்தவரின் தந்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் வெலிகந்த காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
"எரிவாயு அடுப்பு பற்ற வைத்தது. எரியவில்லை, தீப்பெட்டியை கண்டுபிடித்து பற்றவைத்தநிலையில் அவ்வளவுதான் தெரியும். வெலிகந்தைக்கு மகளை கொண்டு வந்துவிட்டார்கள். பின்னர் பொலன்னறுவைக்கு அனுப்பினார்கள். பொலன்னறுவை மருத்துவமனைக்கு பார்க்கப் போனேன். வீட்டின் சமயலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் எரியாததால் தீக்குச்சியால் பற்றவைக்க முற்பட்ட போது வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சடலம் அடக்கம் செய்வதற்காக நேற்று முன்தினம் (நவம்பர் 26) சிறுமியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெலிகந்த காவல் நிலையப் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பு காரணமாக யுவதி உயிரிழந்தமை தெரியவந்துள்ளதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும், எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் யுவதி உயிரிழக்கவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் நேற்று இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மரணம் தீக்குளிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், எரிவாயு அடுப்பு அல்லது எரிவாயு சிலிண்டரில் வெடிப்புச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், சிறுமி தீக்காயங்களுடன் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தின் போது வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லை எனவும், அயலவர்கள் வந்து சமையல் அறையில் ஏற்பட்ட தீயை அணைத்து யுவதியை வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த யுவதியின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் (நவ.26) பிளாட்டியாவ பொது மயானத்தில் இடம்பெற்றது.
உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய, இலக்கம் 68 இல் வசிக்கும் பி.ஜி. ஆயிஷா குமுதுனி 19 வயது திருமணமான பெண் ஆவார்.