இந்திய நீதிமன்றம் ஒன்றில் குண்டு வெடிப்பு : 3 பேர் பலி
India
Explosion
Ludhiana District
Court Of Punjab
By MKkamshan
இந்தியா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் திடீரென நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்