குகதாஸ் மாதுளனின் அபார பந்து வீச்சில் வெற்றிபெற்ற இலங்கை அணி
இந்திய “ஏ“ அணிக்கும் இலங்கை “ஏ“ அணிக்கும் இடையிலான போட்டியில் குகதாஸ் மாதுளனின் அபார பந்து வீச்சின் மூலம் இலங்பை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஏ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் களம் காண்கின்றன.
இதன்படி இன்றைய போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'ஏ' அணி வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவர்
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 49.2 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெற்றிக்குத் தேவையான 266 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
அதன்படி, போட்டி அதிகாரிகள் சூப்பர் ஓவர் மூலம் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடிவு செய்தனர்.
பதற்றமான வாக்குவாதம்
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 16 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியால் 10 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இலங்கை அணி சார்பில் இறுதி ஓவரை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன் வீசியிருந்தார்.
சூப்பர் ஓவரில் முடிந்த போட்டியில் இந்தியா 'ஏ' அணியை இலங்கை 'ஏ' அணி வீழ்த்தி நிலையில் விஷன் ஹாலம்பேஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே பதற்றமான வாக்குவாதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |