வன்முறையை தூண்டும் முகப்புத்தக செயலி..! மெட்டா நிறுவனம் மீது வழக்கு
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நீடித்தது.
இதில், சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு அரசினால் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எத்தியோப்பிய உள்நாட்டுப் போரின் போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக முகப்புத்தக(facebook) செயலியின் தாய் நிறுவனமான 'மெட்டா' மீது கென்யா உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
16 ஆயிரம் கோடி ரூபாய்
இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 16 ஆயிரம் கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரின் போது முகப்புத்தகத்தில் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

