ஜெர்மனியில் விடுதலைப் புலிகளை சந்தித்தாரா அநுர..! தொடரும் சிஐடி விசாரணை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயம் தொடர்பாக இணையத்தில் பொய்யான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,
குறித்த உத்தரவானது, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கம்மன்பிலவின் அறிக்கை
ஜனாதிபதி செயலகத்தின் கூடுதல் செயலாளர் ஜி. சுபாஷ் சமிந்த ரோஷன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
ஜனாதிபதி தனது ஜெர்மனி விஜயத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரைச் சந்திப்பார் என்ற தகவல் தனக்குக் கிடைத்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஊடக சந்திப்பின் போது கூறியதாக கூறப்படுகிறது.
விசாரணை
இந்த கலந்துரையாடல் பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் நோக்கத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
