இஸ்ரேலுக்கு தொடரும் அடி : மற்றுமொரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்
ஈரான்(iran) இராணுவ வான் பாதுகாப்பு அமைப்பு,புதன்கிழமை(18) மாலை மேற்கு லோரெஸ்தான் மாகாணத்தில் இஸ்ரேலிய (israel)ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
முதல் இஸ்ரேலிய ஆளில்லா விமானம், இஸ்பஹான் மாகாணத்தின் மீது நேற்று அதிகாலை வீழ்த்தப்பட்டது.
தந்திரோபாய நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது
இஸ்ரேலால் தயாரிக்கப்பட்ட,ஹெர்ம்ஸ் 900 என்ற ஆளில்லா விமானம் நடுத்தர உயரத்தில் நீண்ட தாங்கும் திறன் கொண்டதாகும். இது தந்திரோபாய நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது.
புதன்கிழமை மாலை இஸ்ரேலுக்கு எதிராக ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் III இன் 12வது கட்டத்தை ஏவிய பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் முழுவதும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு வெற்றிகரமாக சவால் விட முடிந்தது என்று கூறியது.
ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிவிப்பு
“அலாரம் சைரன்களின் சத்தம் ஒரு நொடி கூட அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. சியோனிஸ்டுகள் இப்போது தங்குமிடங்களில் படிப்படியாக இறப்பதா அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விட்டு விரைவில் தப்பிச் செல்வதா என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
