இஸ்ரேலில் இறங்கி அடித்த ஈரான் : இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், நாளையதினம் (20.06.2025) ஈரானிய பிரதிநிதியுடன் அணுசக்தி தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சந்திப்பு ஜெனீவாவில் (Geneva) நடைபெற உள்ளதாக ஜெர்மன் தூதரக தரப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, அமைச்சர்கள் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் காஜா கல்லாஸை (Kaja Kallas) சந்திக்க உள்ளனர்.
அணுசக்தி திட்டம்
பின்னர் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் கூட்டுச் சந்திப்பை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில், விரிவான மோதல் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில், இந்த ஐரோப்பிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமது அணுசக்தி திட்டத்தை, பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவதாக, ஈரான் தரப்பு உறுதியாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை நோக்காகக் கொண்டே, இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழிக்குப் பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேல் வைத்தியசாலை மீது வெடித்துச் சிதறிய பாலிஸ்டிக் ஏவுகணை - பகீர் காட்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
