3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுடன் சீனப் பெண் கைது!
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
குறித்த பெண் இன்று (03.08.2026) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற அந்தப் பெண் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
சீனத் தயாரிப்பு சிகரெட்டு
இதன்போது அந்த பெண்ணிடம் சட்டவிரோமாக கடத்தி செல்லபட்ட சிகரட்டுகள் கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது மேற்க்கொண்ட விசாரணைகளில் சந்தேக நபர், சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயது அழகுக்கலை நிபுணர் என்று தெரியவந்துள்ளது.
அவர் சீனாவில் இருந்து சிகரெட்டுகளை வாங்கி, முதலில் மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்ததுடன், அங்கிருந்து மலேசியா ஏர்லைன்ஸின் MH179 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
30 இலட்சத்திற்கும் அதிக மதிப்பு
அவரது பயணப் பெட்டி மற்றும் முதுகுப்பை ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பல்வேறு சீன பிராண்டுகளைச் சேர்ந்த 20,400 சிகரெட்டுகள் அடங்கிய 102 அட்டைப் பெட்டிகள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |