இஸ்ரேலை சூறையாட பாயப்போகும் ஏவுகணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேல் (Israel) மீது செஜ்ஜில் வகை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது., அதன் ஒரு பகுதியாக தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் (Iran) பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலின் மையப்பகுதியில் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளதாக உள்ளது.

பழிக்குப் பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேல் வைத்தியசாலை மீது வெடித்துச் சிதறிய பாலிஸ்டிக் ஏவுகணை - பகீர் காட்சி
செஜ்ஜில் வகை ஏவுகணை
இந்நிலையிலேயே சொருகா வைத்தியாசலையில் பாலிஸ்டிக் ஏவுகணை வெடித்த பாதிப்புக்கள் மற்றும் மக்கள் பதற்றத்துடன் வெளியேறும் காட்சிககளை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ஈரான் தயாரித்த செஜ்ஜில் வகை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்க கூடியது, செஜ்ஜில் வகை ஏவுகணை அதிவேகமாக இலக்கை அடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது,
இஸ்ரேல் - ஈரான் சண்டையில் செஜ்ஜில் ஏவுகணையின் பயன்பாடு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
செஜ்ஜில் ஏவுகணையானது 18 மீட்டர் உயரம் கொண்டது. இது கிட்டத்தட்ட 700 கிலோ கிராம் எடையுடன் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கவல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
