விவசாயிகளின் ஓய்வூதியத்தை இடைநிறுத்த தீர்மானம் : வெளியான அறிவிப்பு
தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு மேலதிகமாக விவசாய ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளாதவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமநல மற்றும் கமநல சேவைகள் காப்புறுதி சபை (Agricultural and Agrarian Insurance Board) ஊடாக வருடாந்தம் 79,215 விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
அத்துடன் 6,381 கடற்றொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓய்வூதிய கொடுப்பனவு
இவர்களில் சுமார் 6,105 பேர் 06 மாதங்களுக்கு மேலதிகமாக ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஏற்படக்கூடிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழலை தடுக்கும் நோக்கில் அவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் 1918 என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |