இலங்கை பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்: போப்பாண்டவர் வலியுறுத்தல்
இலங்கையில் பொதுமக்களின் கௌரவத்தையும் உரிமையையும் மதித்து அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று புனித போப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலவி வரும் மோசமான நிலைமைகள் குறித்து நேற்றைய(17) தினம் வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற ஏஞ்சலஸ் நிகழ்ச்சியில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு ஆதரவாக தாம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
போப்பாண்டவரின் கோரிக்கை
இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களால் ஏற்பட்ட ஊழல் மோசடிகள், தவறான பொருளாதார முகாமைத்துவம் போன்றவற்றுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
அதேவேளை, அனைத்து தரப்பினரதும் உரிமைகளை மதிக்கும் வகையில் அமைதியான முறையில் வன்முறைகளை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.