விறுவிறுப்பான ஆட்டம் - உலகக் கோப்பை போட்டியில் எம்பாப்பே அதிரடி சாதனை
உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் கிலியன் எம்பாப்பே தன்வசப்படுத்தியுள்ளார்.
ஸ்வீடனுக்கு எதிரான 2 கோல்களின் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் பிரான்ஸ் அணியின் தலைவர் கிலியன் எம்பாப்பே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் அதிக கோல்களை அடித்த வீரருக்கான 'கோல்டன் பூட்' (Golden Boot) போட்டியில் லியோனல் மெஸ்ஸிக்கு இணையாக கிலியன் எம்பாப்பே முன்னேறியுள்ளார்.
விறுவிறுப்பான ஆட்டம்
நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரான்ஸ் அணி, ஸ்வீடனை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி, ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இரண்டு அபார கோல்களை அடித்த பிரான்ஸ் அணியின் தலைவர் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற தனது சொந்த உலக சாதனையை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
நெகிழ்ச்சியான காட்சி
முதல் கோலை அடித்தவுடன் எம்பாப்பே மைதானத்தில் வழக்கமான கொண்டாட்டங்களை விடுத்து, நேராகத் தனது மேலாளரும் பயிற்சியாளருமான டிடியர் டெசாம்ப்ஸை நோக்கி ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடித்துத் தழுவினார்.

சமீபத்தில்தான் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு டெசாம்ப்ஸ் பிரான்ஸ் அணிக்குத் திரும்பியிருந்தார்.
சோகத்தில் இருந்த தங்களின் பயிற்சியாளருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த பிரான்ஸ் வீரர்களும் மைதானத்தில் ஒன்று கூடி கட்டிப்பிடித்த அந்த நெகிழ்ச்சியான காட்சி, காண்போரை சிலிர்க்க வைத்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |