மகிந்த மற்றும் பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு: முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis
By Kiruththikan Jul 02, 2022 05:59 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதி (leave to proceed) தொடர்பில் குறித்த மனுவானது உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 01) குறித்த மனுவானது நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மூவர் மாத்திரமே முன்னிலை 

மகிந்த மற்றும் பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு: முன்வைக்கப்பட்ட கோரிக்கை | File A Case In The High Court Srilanka Economic

பிரதிவாதிகள் மூவர் மாத்திரமே நீதிமன்றத்திற்கு முன்னிலையாகினர்.

முதலாவது பிரதிவாதியான சட்டமா அதிபர் திணைக்களம் (அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்), 8 ஆவது பிரதிவாதியான நந்தலால் வீரசிங்க மற்றும் 9 ஆவது பிரதிவாதியான இலங்கை நாணயச் சபை ஆகியோர் சார்பில் அவர்களது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதுபோன்ற வழக்கொன்று (SCFR 195/2022) ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு முன் முன்னிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 8 ஆவது மற்றும் 9 ஆவது பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என குறித்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

மனுதாரர்கள் கோரிக்கை 

மகிந்த மற்றும் பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு: முன்வைக்கப்பட்ட கோரிக்கை | File A Case In The High Court Srilanka Economic

இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்குமாறு நீதிமன்றத்தினால் பிரதம நீதியரசருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பிரதிவாதிகளான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, பேராசிரியர் W.D லக்ஷ்மன், அஜித் நிவாட் கப்ரால் (முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர்) மற்றும் S.R ஆட்டிகல (திறைசேரியின் முன்னாள் செயலாளர்) ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என குறித்த மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் தவறான நிர்வாக நடவடிக்கை என்பவற்றுக்கு குறித்த பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான காரணங்கள் தொடர்பில் விசாரித்து அது பற்றிய அறிக்கை ஒன்றினை தொகுக்க உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஒரு குழுவினை நியமிக்குமாறு குறித்த மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலை

மகிந்த மற்றும் பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு: முன்வைக்கப்பட்ட கோரிக்கை | File A Case In The High Court Srilanka Economic

சந்திரா ஜயரத்ன, ஜெஹான் கனக ரட்ன மற்றும் ஜூலியன் போல்லிங் ஆகியோருடன் இணைந்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது குறித்த மனுவினை தாக்கல் செய்தது.

அரச தலைவர் சட்டத்தரணி சந்தக ஜயசுந்தரவுடன் இணைந்து S.A பேலிங், சிந்தக்க பெர்னாண்டோ, சயுரி லியனசூரிய மற்றும் மனிஷா திஸ்ஸநாயகே ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகினர். 

மகிந்த மற்றும் பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு: முன்வைக்கப்பட்ட கோரிக்கை | File A Case In The High Court Srilanka Economic

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024