குரங்கம்மை அறிகுறிகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நபர்!
India
Virus
World
By Raghav
இந்தியாவில் (India) முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு பரவியுள்ள நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஆண் ஒருவருக்கு இந்நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
இதனையடுத்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்