இலங்கையின் முதல் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் காலமானார்!
Sri Lanka
Media
By Shadhu Shanker
இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய தனது 80ஆவது வயதில் இன்று(8) காலமானார்.
நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலே இவ்வாறு காலமாகியுள்ளார்.
சுமனா நெல்லம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாக சுமனா நெல்லம்பிட்டிய கடமையாற்றியியுள்ளார்.
செய்தி வாசிப்பாளர்
இவர், 1962ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்துகொண்டார்.

அந்த நேரத்தில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்