திருகோணமலை கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!
“டித்வா” பேரிடர் சூழ்நிலைகளின் காரணமாக கடற்றொழில் சமூகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15.12.2025) நடைபெற்றது.
அதன்படி, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் குறித்த கூட்டம் இன்று (15.12.2025) நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன பங்கேற்றிருந்தார்.
கடற்றொழிலாளர்கள்
இதில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், கடற்றொழில் துறை அதிகாரிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, பேரிடர் காலங்களில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட வாழ்வாதார பாதிப்புகள், கடற்றொழில் உபகரணங்களுக்கான சேதம், நிவாரண உதவிகள் வழங்கல் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 9 மணி நேரம் முன்