சிறிலங்கா கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் தொடர்பில் தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
fisherman
stalin
srilanka navy
tamilnadu cheif minister
By Sumithiran
சிறிலங்கா கடற்படையின் படகு மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் தமிழகம் புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் மீனவர் ராஜ்கிரண் உடலை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவேளை சிறிலங்கா கடற்படையினரின் படகு மோதியதில் றீகன் என்ற மீனவர் காணாமற்போனநிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்