இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: இந்திய கடற்றொழிலாளர் பரபரப்பு தகவல்

Indian fishermen Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Shadhu Shanker Aug 03, 2024 04:24 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இலங்கை கடற்படையினர்(Sri lankan Navy) உள்ளாடைகளுடன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று உணவு கூட கொடுக்காமல் பல மணி நேரம் விசாரித்து பின்னர் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக உயிர் பிழைத்த இந்திய கடற்றொழிலாளர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை(31) கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியுள்ளது.

இதில் படகிலிருந்து மலைச்சாமி (59) என்ற கடற்றொழிலாளர் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன் (64) என்ற கடலில் கடற்றொழிலாளர் மாயமாகி உள்ளார்.

நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை கடற்றொழிலாளரை மீட்ட நாகை கடற்றொழிலாளர்கள்

நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை கடற்றொழிலாளரை மீட்ட நாகை கடற்றொழிலாளர்கள்

ரோந்து படகு

இந்நிலையில், படகு மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியதில் சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளர் உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்கள் கடல் வழியாக இன்று (3) அதிகாலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: இந்திய கடற்றொழிலாளர் பரபரப்பு தகவல் | Fisherman S Body Recovered Near Rameswaram

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டமுத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள் வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழில் கோர சம்பவம்: முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் 3 வாகனங்கள் மோதி விபத்து

யாழில் கோர சம்பவம்: முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் 3 வாகனங்கள் மோதி விபத்து

 சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்

மேலும் இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய கடற்றொழிலாளர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை உலங்கு வானூர்தியில், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: இந்திய கடற்றொழிலாளர் பரபரப்பு தகவல் | Fisherman S Body Recovered Near Rameswaram

இந்நிலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்கள் மற்றும் மலைச்சாமி உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைத்தனர்.

அனுப்பி வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைத்தனர்.

பல தடவைகள் மழை பெய்யும்: இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பல தடவைகள் மழை பெய்யும்: இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை கடற்படை

உடலை பெற்று கொண்ட கடற்படை வீரர்கள் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திற்கு எடுத்து வந்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: இந்திய கடற்றொழிலாளர் பரபரப்பு தகவல் | Fisherman S Body Recovered Near Rameswaram

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மலைச்சாமியின் உடல் நோயாளர் காவு வண்டி மூலம் எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

இதேவேளை, நடுக்கடலில் திடீரென வந்த இலங்கை கடற்படை ரோந்து படகு மீன்பிடி படகின் மீது மோதியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கியதாகவும், படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்த நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாகவும், கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர் ராமசந்திரனை இலங்கை கடற்படை தேடி வருவதாக உயிர் பிழைத்து வந்த கடற்றொழிலாளர் தெரிவித்தார்.

மேலும் தங்களை இலங்கை கடற்படை உள்ளாடைகளுடன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று உணவு கூட கொடுக்காமல் பல மணி நேரம் விசாரித்து பின்னர் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக உயிர் பிழைத்து கடற்றொழிலாளர்கள் குற்றம்சாட்டிய உயிர் தப்பி வந்த கடற்றொழிலாளர்கள் யாழ்பாணத்தில் உள்ள துணை தூதரக அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி தங்களை பத்திரமாக தாயகம் அனுப்பி வைத்ததாக கடற்றொழிலாளர்கள் இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்த கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி