நடுக்கடலில் படகுடன் மாயமான கடற்றொழிலாளர்கள்
சிலாபம் பகுதியில் இருந்து புறப்பட்ட மூன்று மீன்பிடி படகுகளில் ஒன்று அதன் கடற்றொழிலாளர்களுடன் கடலில் மாயமாகியுள்ளது.
பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக குறித்த படகு காணாமல் போயுள்ளதாகவும் அதில், இரண்டு கடற்றொழிலாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மீதமிருந்த இரண்டு படகுகளில் இருந்த கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பதாக கரைக்கு நீந்தி வந்துள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை தோல்வி
படகுடன் காணாமல் போன இரண்டு கடற்றொழிலாளர்களும் சிலாபத்தில் உள்ள வெல்லா கொலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில், காணாமல் போன படகில் இருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், இது குறித்து ஆராய விமானப்படை பெல் 12 உலங்குவானூர்தியை பயன்படுத்தி இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், படகு மற்றும் இரண்டு கடற்றொழிலாளர்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
