மைத்திரியின் அணியிலும் வெடித்தது பிளவு- மேலும் ஐவர் அரசுடன் இணைவு
நிமல் சிறிபால டி சில்வாவைத் தவிர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.மகிந்த அமரவீர அமைச்சரவை அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. எஞ்சிய நால்வரில் சுமார் மூவர் அரச அமைச்சுப் பதவிகளை வகிக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்த போதிலும், பதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும், இவ்வாறான சூழலிலேயே இவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
