போலி தங்க ஆபரணங்கள் விற்பனை : பெண்கள் உட்பட் ஐவர் சிக்கினர்
Sri Lanka Police Investigation
Crime
Gold
Arrest
By Sumithiran
போலி தங்க ஆபரணங்களை விற்பனை செய்தத நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி தங்க ஆபரணங்களை விற்பனை செய்தல் மற்றும் தயாரித்தல் தொடர்பாக கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் இந்த சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொலன்னாவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அவர்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள்,மற்றைய சந்தேக நபர் ஹெய்யன்துடுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி