மாத்தளையில் விசித்திர சம்பவம்: 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ரொட்டிகள்!
மாத்தளையில் பத்து ரொட்டிகளும் ஒரு மென்பான போத்தலும் 10 ஆயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை பகமூனபகுதியில் மரண நிகழ்வொன்று இடம்பெற்ற வேளையில் இறுதி சடங்கிற்கு முன்னர் சிலர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்த்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர், 10 ரொட்டிகளையும் மென்பான போத்தல் ஒன்றினையும் மரண நிகழ்விற்கு வருகை தந்தவர்களிடம் ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்தார்.
ஏலத்தில் கிடைத்த பணம்
இதனையடுத்து, மரண நிகழ்விற்காக வருகை தந்திருந்தவர்கள் ஒவ்வொரு விலையையும் அறிவித்துக்கொண்டிருக்கையில் வருகை தந்திருந்த ஒருவர் 10 ஆயிரம் ரூபாவை அறிவித்தார்.
இந்தநிலையில், ஏலம் நிறுத்தப்பட்டு 10 ரொட்டிகளும் மென்பானமும் 10 ஆயிரம் ரூபாவை கோரியவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவர், ஏலத்தில் பெற்றுக்கொண்ட ரொட்டிகளை அங்கிருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்தார்.
அதேவேளை, ஏலத்தில் கிடைத்த பணத்தினை மாணவி, மரண சடங்கின் செலவீனங்களுக்காக உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
