இராஜாங்க அமைச்சர் மக்களால் தாக்கப்பட்டாரா?
People
Kegalle
Economy
SriLanka
Kanaka Herath
By Chanakyan
கேகாலை - ரஞ்வல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நேற்றைய தினம் பயணித்துக் கொண்டிருந்த போது சிலர் எரிவாயு கொள்கலன்களால் தாக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை ரஞ்வல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பயணித்த வாகனத்தின் மீது கொள்கலன்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,