கவனயீனத்தால் பறிபோன வெளிநாட்டவரின் உயிர்
Sri Lanka
Sri Lankan Peoples
Tourism
By Dhilak
வெளிநாட்டவர் ஒருவர் தொடருந்தின் கதவில் ஆபத்தான முறையில் பயணித்தமையால் சுரங்கமொன்றின் சுவரில் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது, இன்று(03) மாலை இடம்பெற்றுள்ளது.
சுரங்கப்பாதை விபத்து
உயிரிழந்த வெளிநாட்டவர் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நானுஓயா மற்றும் இடல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான 19ஆம் இலக்க சுரங்கப்பாதையில் மோதி இந்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
பயணிகளுக்கு அறிவுறுத்தல்
உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் தொடருந்து நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடருந்து சட்டத்தின்படி, தொடருந்து நகரும் போது பயணிகள் அனைவரும் பெட்டிக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி