பெரஹெரவில் ஜனாதிபதி இருந்த போது அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்!
வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரவின் போது சட்டவிரோதமாக ட்ரோன் கமரா பறக்கவிட்ட வெளிநாட்டவர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரஹெரவில் நேற்றையதினம்(08) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெரஹர நடந்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன், விமானப்படையின் சிறப்பு தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்யப்பட்டு பாதுகாப்பாக வீழ்த்தப்பட்டுள்ளது.
போர்த்துகீசிய நாட்டவர்
சம்பவம் குறித்து உடனடியாக செயற்பட்ட பாதுகாப்புப் படையினர், கண்டி ஏரிக்கு மேலே அமைந்துள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் இருந்து ட்ரோன் இயக்கப்பட்டது என்பதை அடையாளம் கண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போர்த்துகீசிய நாட்டவரால் ட்ரோன் இயக்கப்பட்டது தெரியவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இலங்கையில், குறிப்பாக தேசிய நிகழ்வுகளின் போது மற்றும் உயர் பாதுகாப்பு மண்டலங்களில் ட்ரோன்களை இயக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி கட்டாயமாகும்.
இதன்படி, கைது செய்யப்பட்ட போர்த்துகீசிய நாட்டவர் அத்தகைய அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்றாரா என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்புச் சட்டங்களை மீறியதற்காக அவர் மீது மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
