தீடீரென புடினை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப் - உற்று நோக்கும் உலகம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
முதல் நேரடி சந்திப்பு
சந்திப்பில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பிரதேசங்களை "பரிமாற்றம்" செய்வது குறித்து விவாதிக்கப்படலாம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றரை ஆண்டுகளாகப் போராடப்பட்ட பிரதேசங்கள் குறித்து பேசுவோம். சில பிரதேசங்களை மீட்பது, சிலவற்றை பரிமாறுவது பற்றி பேச்சு நடக்கும்.
இது சிக்கலானது, ஆனால் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு பின்லாந்தில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் புடினுக்கு இடையேயான முதல் நேரடி சந்திப்பாகும்.
இந்நிலையில் புடின் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
